மூதாட்டி கழுத்தை நெறித்து செயின் பறித்த வாலிபர் கைது 

மூதாட்டி கழுத்தை நெறித்து செயின் பறித்த வாலிபர் கைது 

மூதாட்டி கழுத்தை நெறித்து செயின் பறித்த வாலிபர் கைது

நித்திரவிளையில் மூதாட்டி கழுத்தை நெறித்து செயின் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் நகையை பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சின்னத்துறை பகுதியை சேர்ந்தவர் வியாகுலம்மா (74) கடந்த 11ஆம் தேதி அந்தப் பகுதியில் உள்ள கிறிஸ்தவ குருசடியில்ல திருவிழாவிற்கு சென்று விட்டு நள்ளிரவு தனது பேத்தியின் பைக்கில் வீட்டில் வந்து இறங்கியபோது, வாலிபர் ஒருவர் வியாகுலம்மாவை தள்ளி கழுத்தில் கிடந்த இரண்டரைப்பவுன் தங்க செயினை அறுத்து சென்றார். இதில் காயமடைந்த மூதாட்டி அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக மூதாட்டி மகள் லிஜி (49) நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். இது சம்பந்தமாக போலீசார் சின்னதுறை பகுதி ஆண்டனி என்பவரது மகன் அஜித் (19) என்பவரை நேற்று மாலையில் கைது செய்தனர். தற்போது இவர்கள் குடும்பத்துடன் நித்திரவிளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் வியாகுலமாவின் கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் செயினை பறித்து சென்றதையும் ஒப்புக்கொண்டார். இதை அடுத்து வீட்டில் மறைத்து வைத்திருந்த செயினையும் போலீசார் மீட்டனர். கைதான வாலிபர் ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் தேதி வைக்கல்லூர் பகுதியில் நடந்து சென்ற ஜலஜா (62) என்ற பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்டபோது, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தவர் என்பதும், தற்போது ஜாமீனில் வெளியே வந்தவர் மீண்டும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

Tags

Next Story