ஓடும் பஸ்ஸில் கண்டக்டருக்கு வெட்டு வாலிபர் கைது 

ஓடும் பஸ்ஸில் கண்டக்டருக்கு வெட்டு வாலிபர் கைது 
காயமடைந்த கண்டக்டர் விஜயன்
அருமனை அருகே ஓடும் பஸ்ஸில் கண்டக்டருக்கு வெட்டு - போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் கைது 
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே கற்றுவா என்ற இடத்தில் இருந்து மார்த்தாண்டத்துக்கு நேற்று அரசு பஸ் பயணிகளை ஏற்றுக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அதில் அருமனை பகுதியை சேர்ந்த விஜயன் 59 என்பவர் கண்டக்டர் ஆக இருந்தார். பஸ் குஞ்சாலுவிளை என்ற இடத்தில் வந்த போது வாலிபர் ஒருவர் பஸ்ஸில் ஏறியுள்ளார். பின்னர் கண்டக்டர் இடம் 100 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி விட்டு இருக்கையில் அமர்ந்துள்ளார். இந்த நிலையில் கண்டக்டர் மீதி பணத்தை தனது இருக்கையில் அமர்ந்து கொண்டே அந்த வாலிபரிடம் கொடுத்துள்ளார். பணத்தை உட்கார்ந்து தான் கொடுக்கணுமா? எழுந்து வந்து கொடுக்க மாட்டாயா? என்று கேட்டு தகராறு செய்தார். பின்னர் அந்த பஸ் அருமனை சந்திப்பு பகுதியில் வந்த போது வாலிபர் மீண்டும் தகராறு செய்து, கையில் வைத்திருந்த கத்தியால் கண்டக்டர் தலை பகுதியில் வெட்டி விட்டு இறங்கி ஓடினார். இதை பார்த்த பயணிகள் கூச்சலிட்டனர். பின்னர் பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணை அவர் திருவட்டாறு பகுதியை சேர்ந்த தொழிலாளி மெல்வின் 26) என தெரிய வந்தது. காயம் அடைந்த கண்டக்டர் விஜயன் தக்கலை அரசு ஆஸ்பத்திரி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து மெல்வினை கைது செய்தனர்.

Tags

Next Story