பரோட்டா கடையில் தகராறு : வாலிபர் கைது

பரோட்டா கடையில் தகராறு : வாலிபர் கைது
கைது
தூத்துக்குடியில் பரோட்டா கடையில் கண்ணாடியை அடித்து நொறுக்கி தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் பரோட்டா கடையில் கண்ணாடியை அடித்து நொறுக்கி தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 6வது தெருவைச் சேர்ந்தவர் கணேசமணி மகன் பாக்கியராஜ் (48). இவர் திரவியபுரம் மெயின் ரோட்டில் பரோட்டா கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு பாக்கியநாதன் விளையைச் சேர்ந்த முருகன் மகன் சரவணகுமார் (எ) ஜான்சன் (30) என்பவர் இவரது கடைக்கு சாப்பிட வந்தாராம். அவர் பரோட்டா சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் கடையின் கண்ணாடி, சால்னா சட்டிகளை அடித்து உடைத்து தகராறு செய்துள்ளார். இதனால் கடையில் ரூ.30ஆயிரம் சேதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கடையின் உரிமையாளர் பாக்கியராஜ் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மம்முது வழக்குப் பதிந்து சரவண குமார் (எ) ஜான்சனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story