கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞர் கைது

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞர் கைது

இளைஞர் கைது

கோவை:ராக்கிபாளையம் அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்.எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வரும் இவர் சம்பவத்தன்று துடியலூர் சந்தைப்பேட்டை சாலையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மதுரையை சேர்ந்த அப்துல் சமீர்(21) என்ற இளைஞர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சித்துள்ளார்.அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் சத்தமிட அருகில் இருந்தவர்கள் அப்துல் சமீரை பிடிக்க முயன்றனர்.அதற்குள் பணத்தைப் பறித்துக் கொண்ட அப்துல் சமீர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.இது குறித்து விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் துடியலூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இச்சம்பவத்தில் ஈடுபட்ட அப்துல் சமீரை கைது செய்த சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story