ஆற்காட்டில் கஞ்சா விற்றவர் கைது!

ஆற்காட்டில் கஞ்சா விற்றவர் கைது!

கோப்பு படம்

ஆற்காடு பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை ஆற்காடு டவுன் போலீசார் கைது செய்துள்ளனர் .

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்காடு சாய்பாபா நகர் பகுதியில் உள்ள முட்புதரில் சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியதால், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆற்காடு ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ராஜேஷ் (39) என்பதும், இவர் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story