ஒரு கிலோ கஞ்சாவை பதுக்கிய இளைஞர் கைது !

ஒரு கிலோ கஞ்சாவை பதுக்கிய இளைஞர் கைது !

 கஞ்சா

ரூ 11 ஆயிரம் மதிப்புள்ள, ஒரு கிலோ கஞ்சாவை பதுக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ரூ 11 ஆயிரம் மதிப்புள்ள, ஒரு கிலோ கஞ்சாவை பதுக்கிய இளைஞர் கைது. கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக மதுவிலக்கு பிரிவு பெண் காவல் ஆய்வாளர் ரஷியா சுரேஷ்க்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 10-ம் தேதி மதியம் 12.30 மணி அளவில், உப்பிடமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது,அருகில் உள்ள மயானம் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போது, அங்கு ஒரு கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, உப்பிடமங்கலம், தெற்கு கேட் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் கோகுல் பிரசாத் வயது 24 என்பவர், இந்த குற்ற செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

எனவே கோகுல் பிரசாத்தை கைது செய்து,அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் மதுவிலக்கு பிரிவு காவல் துறையினர்.

Tags

Next Story