சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது

காவல் நிலையம் 

பல்லடத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை பல்லடம் மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த செல்வம் என்பவ ரது மகன் நித்திஷ் (21). பல்லடத்தில் உள்ள தனியார் மில் ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அதே நிறுவனத்தில் பணிபுரியும் பல்லடம் மங்கலம் ரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் காதல் ஏற்பட்ட நிலை யில் இருவரும் கடந்த 4-ந் தேதி பல்லடம் அருகே உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட மகளிர் போலீசார் 16 வயது சிறுமியை திருமணம் செய்த நித்திஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story