போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாலிபர் கைது!

போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாலிபர் கைது!

கைது

சேத்துப்பட்டு அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு லூர்து நகரை சேர்ந்தவர் பிலிப் குமார் (வயது 35). இவர் போளூர் சாலையில் நின்று கொண்டு பொதுமக்களை ஆபாசமாக பேசி, போக்குவரத்துக்கு இடையூறு செய்துள்ளார். இதுகுறித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி பிலிப்குமாரை கைது செய்தனர்.

Tags

Next Story