கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது

கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது

சிவகங்கையில் அத்துமீறி கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கையில் அத்துமீறி கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் பகுதியில் உள்ள இந்தியன் பேங்க் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சிவகங்கை நகர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சிவகங்கை நகர் காவல் நிலைய காவல் சார்பு ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் காவலர்கள் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் சிவகங்கை நேரு பஜார் பகுதியில் உள்ள ஜாஹிர் ஹுசேன் தெருவை சேர்ந்த ராம்குமார் மகன் அப்துல்ஷாம் (வயது 22) என்பவர் அவரது உபயோகத்திற்காக கஞ்சா வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அவரிடம் இருந்த சுமார் 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story