போலியான வாரிசுச் சான்றிதழ் தயாரித்த வாலிபர் கைது!
![போலியான வாரிசுச் சான்றிதழ் தயாரித்த வாலிபர் கைது! போலியான வாரிசுச் சான்றிதழ் தயாரித்த வாலிபர் கைது!](https://king24x7.com/h-upload/2024/06/15/550004-arrest.webp)
கைது
போலியான வாரிசு சான்றிதழ் தயாரித்து தன் பெயரில் பட்டா மாற்றம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குடியாத்தம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணிபுரிந்து வரும் பிரகாஷ் என்பவர் கடந்த ஜூன் 10ஆம் தேதி வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில்,"குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சரவணன், அவரது மனைவி சுஷ்மிதா மற்றும் பிரசாந்த் ஆகியோர் இணைந்து போலியான வாரிசு சான்றிதழ் மற்றும் ஆவணங்களை தயாரித்து தாழையாத்தம் கிராமத்தில் உள்ள சரவணன் என்பவர் தந்தையின் பெயரில் உள்ள வீட்டை தன் பெயருக்கு மாற்றம் செய்து பின்னர் தனது மனைவியின் பெயருக்கு மாற்றம் செய்து ஏமாற்றியுள்ளார். ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாபு ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சரவணனை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.
Next Story