பஸ்நிறுத்தத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது

பஸ்நிறுத்தத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது
கைது
முதலூரில் பஸ்நிறுத்தத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னு முனியசாமி தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். முதலூர் பஸ் நிறுத்தத்தில் வாலிபர் ஒருவர் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்து கொண்டிருந்தார்.

போலீசார் அவரை கண்டித்தும், தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதை தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், அவர் முதலூர் தர்மபுரி எம்.ஜி.ஆர். காலனி தர்மராஜ் மகன் அரவிந்த் (30) என தெரியவந்தது. இது தொடர்பாக தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags

Next Story