திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

காவல் நிலையம்

திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை வீரபாண்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் வீரபாண்டி போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் முருகம்பாளையம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த தீபக் ரகுநாத் (வயது 21) என்பதும் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து தீபக்ரகுநாத்தை கைது செய்து அவரிடமிருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்...

Tags

Next Story