அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது

லாட்டரி விற்பனை 

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள சிவன்கோயில் தேர்முட்டி அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி நகர பகுதியில் லால்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிவன் கோயில் தேர்முட்டி அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் லால்குடி எல் .அபிஷேகபுரம் கோல்டன் சிட்டி பகுதியைச் சேர்ந்த 37 வயதான விக்னேஷ் என தெரிய வந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் அவரிடமிருந்து 6 கேரள மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story