இறைச்சி கடைக்காரரை வெட்டிய வாலிபர் கைது

இறைச்சி கடைக்காரரை வெட்டிய வாலிபர் கைது

கைது 

ஆறுமுகநேரியில்  இறைச்சி கடைக்காரரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பேயன்விளையைச் சேர்ந்த அய்யாதுரை மகன் அழகு (53). இவர் ஆறுமுகநேரி மற்றும் காயல்பட்டினம் பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்விரோதத்தில் பேயன்விளையை சேர்ந்த வல்லாளன்மகாராஜன் மகன் சிவனனைந்த பெருமாள் என்ற சிவா(26) என்பவர் அழகை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி தலைமறைவானார். இதில் அவரது இடது கை துண்டானது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அழகு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சிவனனைந்த பெருமாளை தேடிவந்தனர். நேற்று முன்தினம் இரவு நாககன்னியாபுரம் ரயில்வே கேட் அருகே பதுங்கி இருந்த சிவனனைந்த பெருமாளை ஆறுமுகநேரி போலீசார் கைது செய்தனர்

Tags

Next Story