சின்னமனூரில் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த இளைஞர் கைது

சின்னமனூரில் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த இளைஞர் கைது

காவல் நிலையம்

சின்னமனூரில் பெண்ணிடம் எட்டு பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் சின்னமனூர் காந்தி நகர் குடியிருப்பைச் சேர்ந்த மங்களதாஸ் மனைவி தேன்மொழி இவர் அரசு மாணவியர் விடுதி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார் பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர் தேன்மொழி அணிந்திருந்த எட்டு பவுன் தங்கச் சங்கிலி பறித்துக் கொண்டு தப்பிய ஓடினார்.

அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அவரை பிடித்து சின்னமனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சத்திய நாராயணன் மகன் ராஜேஷ் கிருஷ்ணன் என்பதும் இவர் உத்தமபாளையம் அருகே கோம்பையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்ததும் தெரிய வந்தது.

அவரிடம் இருந்து எட்டு பவுன் தங்கச் சங்கிலி மீட்கப்பட்டு தேன்மொழியிடம் ஒப்படைக்கப்பட்டது இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து ராஜேஷ் கிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Tags

Next Story