வியாபாரியை கத்தியால் குத்திய வாலிபர் கைது

வியாபாரியை கத்தியால் குத்திய வாலிபர் கைது

கைது

வியாபாரியை கத்தியால் குத்திய வாலிபர் கைது. போலீசார் நடவடிக்கை.
சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 48). வியாபாரியான இவர் நேற்று முன்தினம் செவ்வாய்பேட்டை பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சந்தைபேட்டை பகுதியை சேர்ந்த பூபதி (24) என்பவருக்கும், சுந்தர்ராஜனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே வாலிபர் திட்டியதை சுந்தர்ராஜன் தனது செல்போனில் படம் பிடித்தார். இதனால் ஆத்திரமடைந்த பூபதி தான் வைத்திருந்த கத்தியால் அவரை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பின்னர் காயமடைந்த சுந்தர்ராஜனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதியை கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story