காட்பாடியில் பைக் திருடிய இளைஞர் கைது.

காட்பாடியில் பைக் திருடிய இளைஞர் கைது.

பைக் திருடிய வாலிபர்

காட்பாடியில் பைக் திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

. வேலூர் மாவட்டம் காட்பாடி வள்ளிமலை சாலையில் சான் பாஷா என்பவரின் மகன் அசார் பாஷா என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார் தனது இரு சக்கர வாகனத்தை கடை முன் நிறுத்திவிட்டு வியாபாரம் செய்து வந்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து வெளியில் வந்து இரு சக்கர வாகனத்தை பார்த்த போது இரு சக்கர வாகனம் காணாவில்லை உடனே அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர் கிடைக்கவில்லை. உடனே சான் பாஷா என்பவரின் மகன் அசார் பாஷா காட்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திக் இடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு இரு சக்கர வாகனத்தை தேடி வந்தனர்

அப்போது காட்பாடி வள்ளிமலை சாலையில் காட்பாடி காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வேலூர் ஓட்டேரி இந்திரா நகரை சேர்ந்த கலைமணி மகன் தனுஷ் வயது(21) என்பதும் காட்பாடி வள்ளிமலை சாலையில் மளிகை கடை நடத்தி வரும் சான்பாஷா மகன் அசாம்பாஷா என்பவர் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. உடனே அவனை காவல் நிலையத்தில் அழைத்து சென்று தீவிரவாதி விசாரணை மேற்கொண்டு காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். புகார் அளித்த ஒரே நாளில் இருசக்கர வாகனத்தை திருடிய திருடனை திறமையால் பிடித்து வழக்கு பதிவு செய்த உதவி ஆய்வாளரை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story