தொழிலாளியிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது

தொழிலாளியிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது

கைது

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொழிலாளியிடம் செல்போன் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 43), கூலித்தொழிலாளி. இவர் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது அவர் வைத்திருந்த செல்போனை வாலிபர் ஒருவர் பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்து அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர் அஸ்தம்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story