பணம், செல்போன் பறித்த வாலிபர் கைது

பணம், செல்போன் பறித்த வாலிபர் கைது

பைல் படம்

சேலத்தில் இரண்டு பேரிடம் பணம், செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சேலம் தாதகாப்பட்டி சன்முகா நகரை சேர்ந்தவர் செல்லதுரை (58) இவர் தாதுபாய்குட்டை பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூபாய் 450 பறித்து சென்றார். இது பற்றி அவர் அளித்த புகாரின் பேரில் டவுன் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதேபோல் ஓமலூரை சேர்ந்த பள்ளி வாகன டிரைவரான பிரபு (20) என்பவர் தனது கர்ப்பிணி மனைவியை கடந்த 13ஆம் தேதி அரசு மருத்துவமனையில் சேர்த்து இருந்தார். அப்போது சாப்பாடு வாங்குவதற்காக பிரபு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த போது அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போனை ஒரு வாலிபர் பறித்து சென்றார்.

இது பற்றிய புகாரின் பெயரில் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் செல்லதுரை மற்றும் பிரபு ஆகியோரிடம் பணம் செல்போனை பறித்து சென்றது வாய்க்கால்பட்டறையைச் சேர்ந்த விக்னேஷ் என்ற குல்பி (21) என்பது தெரிந்தது இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story