மருத்துவமனையில் பணம் திருடிய வாலிபர் கைது

மருத்துவமனையில் பணம் திருடிய வாலிபர் கைது

மருத்துவமனையில் பணம் திருடிய வாலிபர் கைது

சேலத்தில் மருத்துவமனையின் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது.
சேலம் சூரமங்கலம் சுப்பிரமணிய நகரைச் சேர்ந்தவர் பவி (வயது34). தோல் மருத்துவர். சீலநாயக்கன்பட்டி வேலு நகரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். கடந்த 9-ந் தேதி இரவு வேலை முடிந்து மருத்துவமனையை பூட்டி விட்டு இவர் வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை மருத்துவமனைக்கு அவர் வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அங்கிருந்த ரூ.2 ஆயிரம் திருட்டு போனது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மருத்துவமனையில் பணம் திருடியது கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்த பிரதாப் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story