ஆற்காடு: டூ வீலர் திருடிய வாலிபர் கைது!

ஆற்காடு: டூ வீலர் திருடிய வாலிபர் கைது!

கைது

ஆற்காடு அருகே தொடர் டூ வீலர் திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் 4 டூவீலர்களை பறிமுதல் செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு டவுன் எல்லைக்கு உட்பட்ட செய்யாறு கூட்ரோடு பகுதியில் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச்செல்வி, சுரேஷ்குமார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் வாலாஜா அருகே உள்ள அனந்தலை மேட்டு தெரு பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் அருள் (31) என்பதும், டூ வீலர் திருட்டில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 4 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story