திருப்பூரில் இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது!

திருப்பூரில் இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது!

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே இருசக்கரவாகனம் திருடிய நபரை கைது செய்து தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே இருசக்கரவாகனம் திருடிய நபரை கைது செய்து தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

திருப்பூரில் இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது! கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் அருள் (வயது 25).இவர் காங்கேயம் ரோட்டில் உள்ள தனியார் பர்னிச்சர் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம்போல தனது இருசக்கரவாகனத்தை கடையின் முன்பு நிறுத்தி விட்டு சென்றார். வேலை முடித்துவிட்டு வந்து பார்த்த போது இருசக்கரவாகனத்தை காணவில்லை. இதுதொடர்பாக அருள் திருப்பூர் தெற்கு போலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று மத்திய பஸ் நிலையம் அருகே போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த தீபக் (24) என்பதும், அருளின் இருசக்கரவாகனத்தை திருடியது ம் தெரியவந்தது. இதையடுத்து தெற்கு போலிசார் தீபக்கை கைது செய்து இருசக்கரவாகனத்தை பறிமுதல் செய்தனர்...

Tags

Next Story