வாசுதேவநல்லூரில் டிரைவருக்கு மிரட்டல் - வாலிபர் கைது

வாசுதேவநல்லூரில் டிரைவருக்கு மிரட்டல் - வாலிபர் கைது

காவல் நிலையம் 

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே அருளாட்சி கிராமத்தை சேர்ந்த டிரைவர் முத்துக்குமார் என்பவருக்கும் அவரது உறவினர் சுரேஷ் என்பவருக்கும் இடையே தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதில் முன் விரோதம் இருந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று முத்துக்குமார் தனது வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது சுரேஷ் அவரை அசிங்கமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார் . இது குறித்த புகாரின் பேரில் வாசுதேவநல்லூர் எஸ்.ஐ யோபு சம்பத் ராஜன் விசாரணை நடத்தி சுரேஷை (26) கைது செய்தனர்.

Tags

Next Story