பெண் போலீஸாருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

பெண் போலீஸாருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

இளைஞர் கைது

பெண் போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் சுரண்டை காவல் நிலைய முதல்நிலை காவலா்கள் ராஜேஸ்வரி, அன்பரசி ஆகியோா் வரகுணராமபுரம் பகுதியில் திங்கள்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த ச.பாண்டியராஜ்(24) என்பவா் அவா்களை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து முதல்நிலை காவலா் ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில், சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து பாண்டியராஜை கைது செய்தனா்.

Tags

Next Story