மானாமதுரையில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது

மானாமதுரையில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது

கைது செய்யப்பட்ட வாலிபர்

மானாமதுரையில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அண்ணாசிலை அருகே தெற்கு ரத வீதியில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி உள்ள பகுதி எப்போதும் அதிக ஆள் நடமாட்டம் உள்ள பகுதியாக காணப்படும்.

இந்த வங்கியை நோட்டமிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பூட்டை வெடி மருந்து வைத்து உடைத்தும், ஜன்னல் கம்பிகளை வெட்டி எடுத்தும் கைலி கட்டிய நபர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் மானாமதுரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளியை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் மானாமதுரை முத்து நகர் மேட்டு தெருவை சேர்ந்த பிரசாந்த் என்ற 31 வயதுடைய இளைஞரை மானாமதுரை டிஎஸ்பி கண்ணன் தலைமையிலான போலீசார் குற்றவாளியை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

மேலும் கொள்ளைக்கு பயன்படுத்திய வெடிபொருள் இரும்பு ராடு மாற்றும் ஸ்பாணர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story