சிவகாசி அருகே மூதாட்டி கொலை வழக்கில் வாலிபர் கைது...

சிவகாசி அருகே மூதாட்டி கொலை வழக்கில் வாலிபர் கைது...

போலீஸ் விசாரணை

சிவகாசி அருகே மூதாட்டி கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சிவகாசி அருகே உள்ள மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை..வாலிபரை பிடித்து போலீஸ் விசாரணை. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவகாசி அருகே வடமலாபுரம் அண்ணா காலனியைச் சேர்ந்தவர் செல்லப்பா மனைவி லட்சுமி (70) இவரது கணவர் செல்லப்பா 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இந்நிலையில் அந்த பகுதியில் முள்புதரில் இயற்கை உபாதை கழிப்பதற்காக மூதாட்டி லட்சுமி சென்றுள்ளார்.நீண்ட நேரம் ஆகியும் மூதாட்டி வராததால் அவரது மகள சுந்தரி மற்றும் உறவினர்கள் தேடியுள்ளனர். நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் வீட்டிற்கு வந்துள்ளனர். அதிகாலை முள்புதரில் மூதாட்டி லட்சுமி இறந்து கிடந்ததாக தகவல் கிடைத்துள்ளது.இது குறித்து திருத்தங்கல் போலீசிற்கு மகள் சுந்தரி தகவல் கொடுத்துள்ளார்.

போலீசார் விரைந்து சென்று மூதாட்டி சுந்தரி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் மூதாட்டி கழுத்து நெரிக்கப்பட்டு இறந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story