வழிப்பறி, கொள்ளை, கொலை வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் கைது!

சாத்தான்குளம் பகுதியில் வழிப்பறி, கொள்ளை, கொலை வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை தனிப்படை போலீசார் வேலூரில் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரைச் சேர்ந்தவர் பாஸ்கர் மகன் பட்டு (எ) லிவிங்ஸ்டன் (23). இவர் மீது தட்டார்மடம் காவல் நிலையத்தில் பல்வேறு அடிதடி, கொள்ளை வழக்குகளும், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 3மாதத்திற்கு முன்பு தொழிலாளியை தாக்கி பைக்கை பறித்து சென்றது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இளைஞரை வழிமறித்து பைக் மற்றும் பொருள்கள் பறித்து சென்ற வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் 15 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இவரை ரவுடி பட்டியலில் வைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் மாவட்ட எஸ்பி, பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் மாவட்ட தனிப் படையினர் இவரை தேடி வந்தனர். இந்நிலையில் இவர் வேலூரில் பதுக்கி இருப்பதாக தகவலின் பேரில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்து நேற்று கைது செய்தனர்.

இதனையடுத்து சாத்தான்குளம் போலீசார் வழக்குபதிந்து சாத்தான்குளம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story