குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருச்சியில் ஏசி மெக்கானிக் கொலை வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
கடந்த 2023 டிச. 31 ஆம் தேதி மஞ்சத்திடல் ரயில் நிலையம் அருகே ஏசி மெக்கானிக்கை வெட்டிக் கொலை செய்த முன்னாள் ராணுவத்தினா் காலனியைச் சோ்ந்த ரா. ஸ்டான்லி டென்னிஸ் (27) என்பவரை பொன்மலை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இதையடுத்து இவரது தொடா் குற்ற நடவடிக்கையைத் தடுக்கும் விதமாக திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி, ஸ்டான்லி டென்னிஸை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க புதன்கிழமை ஆணை பிறப்பித்தாா்.

Tags

Next Story