மேலப்பாளையத்தில் இளைஞர்கள் கைது-பைக் பறிமுதல்

மேலப்பாளையத்தில் இளைஞர்கள் கைது-பைக் பறிமுதல்
பைல் படம்
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் பைக்கை பறிமுதல் செய்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள முஸ்லிம் மேல்நிலை பள்ளியின் முன்பு நேற்று (மார்ச் 1) மாலை அப்பகுதி இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாணவர்கள் குறித்து மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கு பள்ளி நிர்வாகம் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞர்களை கைது செய்து 14 பைக்குகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story