சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது
![சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது](https://king24x7.com/h-upload/2024/02/12/391222-image3a1000040083.webp)
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள முள்ளங்குடியைச் சேர்ந்தவர் ராஜா(31). இவர், 2021-ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்ததில் அந்தச் சிறுமி கர்ப்பமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அச்சிறுமியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றுவிட்டார். இதுதொடர்பாக, பந்தநல்லூர் காவல் நிலையத்தில் திருப்பனந்தாள் கிராம மகளிர் நல அலுவலர் எஸ்.விஜயா புகார் செய்தார்.
அதன்பேரில், காவல் ஆய்வாளர்(பொறுப்பு) ரேகாராணி, போக்சோ மற்றும் குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story