சிறுமி கடத்தல் – வாலிபர் போக்சோவில் கைது

சிறுமி கடத்தல் – வாலிபர் போக்சோவில் கைது

கைது

கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அருகே 15 வயது சிறுமி மாயமானார். இது குறித்து உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில், சிறுமியை சென்னை, பூந்தமல்லியை சேர்ந்த சரவணன் மகன் திருமலை, 19; என்பவர் கடத்திச் சென்றது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் சென்னை சென்று சிறுமியை மீட்டனர். மேலும், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, திருமலையை நேற்று கைது செய்தனர்.

Tags

Next Story