விழுப்புரத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

விழுப்புரத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

வாலிபர் கைது

விழுப்புரத்தில் கொலை முயற்சி வழக்கு வாலிபரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
விழுப்புரம், கோடி தெருவை சேர்ந்தவர் மணி மகன் அன்பரசன்(எ)அன்பு 22 இவர் கடந்த பிப்., 27 ம் தேதி அதே பகுதியை சேர்ந்த உறவினர் வெங்கடேசனிடம் வீண் தகராறு செய்து கொலை முயற்சியோடு தாக்கியுள்ளார். விழுப்புரம் டவுன் போலீசார், அன்பரசன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து கைது செய்தனர். இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்யக் கோரி எஸ்.பி., தீபக் சிவாச், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் பழனி அளித்த உத்தரவின் பேரில், நேற்று விழுப்புரம் டவுன் போலீசார் அன்பரசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story