கே.செட்டிபாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் வாலிபர்கள் கைது

கே.செட்டிபாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் வாலிபர்கள் கைது

காவல் நிலையம்

திருப்பூர் கே செட்டிபாளையம் பகுதியில் இரண்டு கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்களை கைது செய்து நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

திருப்பூர் கே செட்டிபாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்கள் கைது! திருப்பூர்நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கே செட்டிபாளையம் பகுதியில் நல்லூர் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது இரண்டு பேர் சந்தேகத்துக்கிடமாக அப்பகுதியில் சுற்றித்திரிந்தனர்.

அவர்களை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது 2 கிலோ 100 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து இருவரும் விசாரணை மேற்கொண்டதில் அவர் தென்காசி மாவட்ட சேர்ந்த அருண் பாண்டியன் (வயது 24), சுப்புராஜ் (26) என்பதும் இருவரும் திருப்பூர் கே செட்டிபாளையம் பகுதியில் தங்கி பணியன் நிறுவனத்தில்,

டெய்லராக வேலை பார்த்துக்கொண்டு ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து திருப்பூரில் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags

Next Story