அரக்கோணத்தில் கஞ்சாவுடன் வாலிபர் கைது

அரக்கோணத்தில் கஞ்சாவுடன் வாலிபர் கைது

கஞ்சா விற்றவர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் கஞ்சாவை வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை அரக்கோணம் டவுன் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கள் தினேஷ், சிரஞ்சீவிலு தலைமையிலான போலீசார் அரக்கோணம் - திருவள்ளூர் ரோடு, ரயில்வே ஸ்டேஷன், பஜார், பழனி பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அபில்ஸ்பேட்டை ரயில்வே குடியிருப்பு பகுதியில் சென்றபோது போலீசாரை கண்டவுடன் அங்கிருந்து தப்பியோட முயன்ற வாலிபரை அவர்கள் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பச்சை என்கிற ராமமூர்த்தி (26) என்பதும் அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவையும் மறைத்து வைத்திருந்த கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராமமூர்த்தியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story