பெண்ணுடன் தகாத உறவில் இருந்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பெண்ணுடன் தகாத உறவில் இருந்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு

அரிவாள் வெட்டு 

மதுரை அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த இளைஞரை மகன் வெட்டி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்த கோட்டைச்சாமி ( 30 ) என்ற லாரி ஓட்டுநர் அதே ஊரைச் சேர்ந்த ராணி என்ற 45 வயது பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்தாகவும், பலமுறை கண்டித்தும் தகாத உறவு நீடித்து வந்த சூழலில் தி.விலக்கு பகுதியில் கோட்டைச்சாமியின் சகோதரி இல்ல விழாவிற்கு வந்த கோட்டைச்சாமியை மண்டபத்தில் வைத்தே, ராணியின் மகன் கலைச்செல்வன் தனது கூட்டாளிகளுடன் இணைந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படுகாயமடைந்த கோட்டைச்சாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.‌தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து கோட்டைச்சாமியை வெட்டிவிட்டு தப்பி ஓடிய கலைச்செல்வன் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

Tags

Next Story