ஆத்தூர்: பூக்கடை வியபாரியை கத்தியால் குத்திய நபர் கைது

ஆத்தூர்: பூக்கடை வியபாரியை கத்தியால் குத்திய நபர் கைது

இளைஞர் கைது

ஆத்தூர் அருகே கொத்தாம்பாடியில் வீட்டில் வெளியே தூங்கிக் கொண்டிருந்த பூக்கடை வியாபாரியை கத்தியால் குத்தி பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி மகன் பிரபு (26). இவர் அதே பகுதியில் பூக்கடை வைத்து பூ வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் வீட்டின் அதிகாலை தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரது சட்டை பையில் கையை வைத்து பணம் உள்ளதா என தேடி பார்த்துள்ளார். அப்போது பிரபு எழுந்து யார் என கேட்ட போது பிரபுவை கத்தியால் வயிற்றில் குத்த முயன்ற போது பிரபு தனது கையை வைத்து தடுத்தபோது கத்தி கையில் குத்தி படுகாயம் மடைந்த பிரபு கூச்சல் இட்டு போது கத்தியை காட்டி பணம் கேட்டுள்ளார்.

பிரபுவின் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடவே அப்போது அந்த நபர் செங்கல்லை எடுத்து தானே தலையில் அடித்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீசாருக்கு பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக நிகழ்வு இடத்திற்கு வந்த ஆத்தூர் ஊரகப் போலீசார் அந்நபரை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் சென்னை வடபழனி விஜயராகபுரத்தை சேர்ந்த சோலை மகன் மணி (60) என்பதும் கூலி வேலை செய்து வருவதாகவும் தெரியவந்தது. அவர் மீது ஆத்தூர் ஊரக போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதேபோல் சென்னை சேர்ந்த மணி தன்னை தாக்கியதாக அளித்த புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story