வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை
சிவகாசி அருகே வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை.போலீஸ் விசாரணை...
சிவகாசி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி முனீஸ்நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி வெற்றி விநாயகமூர்த்தி (24).இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார்.சம்பவத்தன்றும் வழக்கம் போல் குடித்துவிட்டு தாய் லட்சுமியிடம் தகராறு செய்துள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாரனேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story