வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

தற்கொலை 

ராணிப்பேட்டை அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள தட்டச்சேரி கிராமம் பரசுராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் வெங்கடேசன் (35). இவரது மனைவி கலைச்செல்வி. திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக வெங்கடேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வாழப்பந்தல் போலீசார் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மனைவி கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story