மின் கம்பியை பிடித்து இளைஞர் தற்கொலை

மின் கம்பியை பிடித்து இளைஞர் தற்கொலை
இளைஞர் தற்கொலை
திருக்காட்டுப்பள்ளி அருகே மின்கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்று காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கண்டமங்கலம் பரமேஸ்வரன் காலனியைச் சேர்ந்த வர்சுப்பிரமணியன் மகன் பிரவீன் (19). இவர், 9-ஆம் வகுப்பு வரை படித்துக்கொண்டே கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தாராம். ஜன. 2- ஆம் தேதி இரவு கண்டமங்கலம் பிள்ளை வாய்க்கால் செல்லும் வழியில் உள்ள மின் மாற்றியில் ஏறி மின்கம்பியை தொட்டு தற்கொலை செய்ய முயன்றார். அப்போது மின்சாரம் பாய்ந்ததி தூக்கி வீசப்பட்டார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலைய ஆய்வாளர் ஜெயக்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Tags

Next Story