குடும்ப தகராற்றால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு.!

குடும்ப தகராற்றால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு.!

குடும்ப தகராற்றால் இளைஞர் தற்கொலை

போச்சம்பள்ளி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(29) இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த விக்னேஷ் விஷம் குடித்து அதே பகுதியில் மயங்கி கிடந்தார். தகவல் அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் அல்லது மன அழுத்தம் ஏற்பட்டால் 9152987821 எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

Tags

Next Story