குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை

குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை

தற்கொலை

செய்யாறு அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சப்- கலெக் டர் விசாரணை நடத்தி வருகிறார்.

செய்யாறு அண்ணா நகரை சேர்ந்தவர் ராமானுஜம்(40). இவரது மனைவி அன்னபூரணி (32). இவர்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு திருமணமானது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ராமானுஜம் சரியாக வேலைக்கு செல்வதில்லையாம். ராமானு ஜத்தின் தந்தை சங்குபாணியின் வருமானத்தை நம்பியே குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதனால் அன்னபூரணி, உங்கள் தந்தையின் வருமானத்திலேயே குடும்பம் நடத்த முடியுமா? நீங்கள் எப்போது சம்பாதிப்பது? என கேட்டு வந்துள்ளார்.

இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன வேதனை அடைந்த அன்னபூரணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த செய்யாறு போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அன்ன பூரணியின் தந்தை தேவராஜ் கொடுத்த புகாரின் பேரில் டிஎஸ்பி சின்னராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும், இறந்த அன்ன பூரணிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் செய்யாறு சப்- கலெக் டர் பல்லவி வர்மா விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story