தென்காசி : இளைஞர் தற்கொலை

தென்காசி : இளைஞர் தற்கொலை
சங்கரன்கோவில் அருகே இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை
தென்காசி மாவட்டம், சென்னிகுளம் பகுதியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள சென்னிகுளம் ஆசாரி தெருவை சேர்ந்த பெருமாள் மகன் தங்கராசு (43) மனைவி ஜெய குரு பாரதி37 இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை உள்ளது. இவரது மனைவி ஜெய குரு பாரதி சொந்த ஊரான கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி கிராமத்திற்கு பள்ளி விடுமுறை என்பதால் தனது பெண் பிள்ளையை விடுமுறைக்கு தனது தாய் வீட்டிற்கு விடுவதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார் இந்நிலையில் தங்கராசுஅப்பகுதியில் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.

மேலும் இன்று தங்கராசு சென்ட்ரிங் வேலைக்குச் செல்லாமல் காலையில் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெகு நேரமாகியும் தங்கராசு வெளியே வராததை கண்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது தங்கராசு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், மேலும் தங்கராசுவின் உடலை கீழ் இறக்கி போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை அடக்கம் செய்ய முயன்றனர்.

தகவல் அறிந்த கரிவலம் வந்த நல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து தங்கராசு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story