இளைஞருக்கு வாளால் வெட்டு - 7 பேர் மீது வழக்கு பதிவு

இளைஞருக்கு வாளால் வெட்டு - 7 பேர் மீது வழக்கு பதிவு

முகமது அப்சல்

திருப்பத்தூரில் இளைஞரை வாளால் வெட்டிய ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் வாலிபர் முன்விரதம் காரணமாக கூட்டமாக சென்று தாக்கிக் கொண்டனர். இதில் வாளால் ஒருவரை வெட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

திருப்புத்தூர் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முகமது அப்சல். 24 வயதான இவர் எலெக்ட்ரிசியன் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், திருப்புத்தூர் செட்டியதெருவை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் இருந்த முன் விரோதம் காரணமாக இருவரும் சண்டையிட்டு கொண்டதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து சந்தோஷ் தனது நண்பர்களுடன் வாளுடன் சென்று வாணியன்கோயில் தெரு பகுதியில் சண்டையிட்டு கொண்டனர்.

இதில் முகமது அப்சலுக்கு நெற்றி மற்றும் கை விரல்களில் வெட்டுப்பட்டு திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து திருப்புத்தூர் நகர் போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். திருப்புத்தூரில் மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் தேர்தல் நேரத்தில் அதுவும் பட்ட பகலில் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது கஞ்சா போதையால் இருக்குமோ என்று இப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story