திண்டிவனம் அருகே விபத்தில் ஒருவர் பலி.

திண்டிவனம் அருகே விபத்தில் ஒருவர் பலி.

ராமதாஸ் 

திண்டிவனம் அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த செம்பாக்கம் மோட்டூர் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் ராமதாஸ் (34). வெல்டர். இவர் திண்டிவனத்தில் வெல்டிங் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். ஊரல் பஸ் நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தபோது தனியார் பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story