இன்ஸ்டா ரீல் மோகம் – பறிபோன இளைஞர் உயிர்

இன்ஸ்டா ரீல் மோகம் – பறிபோன இளைஞர் உயிர்

விபத்தில் பலி

நாகையில் விலை உயர்ந்த பைக்கில் அதி வேகமாக சென்று இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய பைக்கை வேகமாக ஓட்டிய வாலிபர் வீட்டு சுவற்றில் மோதி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகப்பட்டினம், திருமேனிசெட்டி தெருவை சேர்ந்தகோகுல கிருஷ்ணன்இன்சாகிராமில் பிரபலமாக வேண்டும் என்று விலை உயர்ந்த அதிவேகபைக்கில் சென்று அதை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வார். இந்நிலையில், கோபாலகிருஷ்ணன் தோழர் பயலுகில் அதிவேகமாக வந்தார். அப்போது நாகப்பட்டினம் திருவாரூர் சாலையில் பைக்காரா என்ற இடத்தில் வளைவில் அதி வேகமாக வந்து திரும்பிய போது அப்பகுதி இருந்த வீட்டு சுவரில் பயங்கரமாக மோதியது.

இதில் தலை பலத்த காயமடைந்து கோகுலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த நாகை நகர காவல் நிலையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரதே சோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து நாகை நகர போலீசார் வழக்கு வந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story