இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி

இளைஞர் பலி 

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே இருசக்கர வாகனம்‌ மீது கார் மோதிய விபத்தில் ண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .

திண்டுக்கல் அருகே அண்ணாமலையார் மில்ஸ் காலனியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32).கூலித்தொழிலாளி.இவர் கடந்த 8-ஆம் தேதி திண்டுக்கல்- நத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது நொச்சிஓடைப்பட்டி அருகே சென்ற போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக சதீஷ்குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சையில் இருந்த சதீஷ்குமார் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து சாணர்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

Tags

Next Story