சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலி

சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலி
சங்கரன் கோவில் அருகே சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலி
தென்காசி மாவட்டம்,சங்கரன்கோவில் அருகே சரக்கு வாகனம் மோதி இளைஞர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள இராமலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் மணிமாறன் இந்திய அஞ்சல் துறையில் தற்காலிகமாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவர் இராமலிங்கபுரம் விலக்கு பேருந்து நிழற்குடை அருகே இருசக்கர வாகனத்தோடு நின்று கொண்டிருந்த போது திருநெல்வேலியில் இருந்து தேனி சென்ற லோடு வேணானது திடீரென நின்று கொண்டிருந்த மணிமாறன் மீது மோதிய விபத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தலை நசுங்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து சம்பவம் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயலும் போது உறவினர்கள் திரண்டு உயிரிழந்த மணிமாறன் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிக்க வேண்டிய மனைவி தேவைக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags

Next Story