கூலித் தொழிலாளி இளைஞருக்கு நேர்ந்த சோகம்

கூலித் தொழிலாளி இளைஞருக்கு நேர்ந்த சோகம்

பலி

சங்ககிரி அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் நேருக்கு நேர் மோதி விபத்து கூலித் தொழிலாளி இளைஞர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட இருகாலூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இளைஞர் முத்துசாமி மகன் மணி (32) இவருக்கு திருமணமாகி ஒரு மனைவி, மகன்,மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவரது மனைவி மீண்டும் கர்ப்பமான நிலையில் எடப்பாடி அருகே கொங்கணாபுரம் பகுதியில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனையெடுத்து, தனது மனைவியை பார்ப்பதற்காக கூலித் தொழிலாளி மணி தனது இருசக்கர வாகனத்தில் சங்ககிரியை அடுத்த வைகுந்தம் காளிப்பட்டி பிரிவு பகுதியில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த டிராக்டர் மணியின் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பம் குறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த சங்ககிரி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான டிராக்டர் ஓட்டுனரை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். சங்ககிரி அருகே கூலித் தொழிலாளி இளைஞர் ஒருவர் கர்ப்பமான மனைவியை அவரது தாயார் வீட்டிற்கு பார்க்க சென்ற போது இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story