பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

சாலை விபத்து 

தூத்துக்குடி அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர் மேலமடம் பகுதியைச் சேர்ந்தவர் மணி மகன் முத்து ராஜா (32). நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடியில் இருந்து மேலமடம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். நயினார்புரம் ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரது பைக் மீது மோதியது. இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த முத்து ராஜா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார். இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) மோகன்ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். முத்து ராஜா மீது மோதி விட்டு சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story