அறுந்து கிடந்த மின்கம்பி : வாலிபர் உயிரிழப்பு

அறுந்து கிடந்த மின்கம்பி : வாலிபர் உயிரிழப்பு

பலியானவர்

கன்னியாகுமரி மாவட்டம்,அழகப்பபுரத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் வேளாங்கண்ணி சாலையை சேர்ந்தவர் ஞான சற்குணமணி மகன் டோனிகிட் (33). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் ஊருக்கு வந்த இவர் டெக்கரேஷன் தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆகி மனைவி 5மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக டோனி கிட் தனது அண்ணன் சாம்ராய் கிட், நண்பர் டெரன்ஸ் மற்றும் அக்கா மகனான 8 வயது ஜெபின் ஆகியோர் உடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாலையில் மின்கம்பி அறுந்து விழுந்தது கிடந்ததால் அந்தப் பகுதியில் இருள் சூழ்ந்து இருந்துள்ளது. இதை கவனிக்காத டோனி கிட் மற்றும் சிறுவன் ஆகியோர் அந்த மின்கம்பியில் சிக்கிவிட்டனர்.

அவர்களை உடனடியாக மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் டோனி மீது மின்கம்பி சுற்றியதால் ட்ரான்ஸ்பார்மரை ஆப் செய்து அவரை மீட்டு அஞ்சுகிராம் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கொண்டு சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை டாக்டர்கள் டோனி கிட் இறந்த விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து அஞ்சு கிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story